Posts

Showing posts from July, 2025

N . ஶ்ரீராம் இலக்கிய உலகம்

Image
  N. ஶ்ரீராம் - எழுத்தாளர் படைப்புலகம் N. ஶ்ரீராமின் மாயதீதம் குறுநாவல் புது வாசிப்பு அனுபவம் அளித்தது. அதில் வரும் பல தொன்மம் சார்ந்த நிகழ்வுகள் கிளர்ச்சி ஏற்படுத்தியது. அதை வாசித்த முடித்த பின், N. ஶ்ரீராம் நிலம்/மண் சார்ந்த அழகியல் மற்றும் கிராம மக்களின் மண் சார்ந்த வாழ்க்கை முன்வைபவர் என்னும் எண்ணம் ஆசிரியரின் மீது எழுந்தது. பர்சனாலிட்டி ஆக கூற வேண்டுமென்றால், கிராமம் சார்ந்த மனிதர் என அடையாளப்படுத்த வழிவகுத்தது மாயதீதம்.      இவை யாவையும் உடைக்கும் நாவல், அத்தி மரச்சாலை,.ஶ்ரீராமின் கிராம வாழ்க்கை அனுபவங்களும், தொலைக்காட்சி ஊடக துறையில் அனுபவங்களும் ஒன்று சேர்ந்து இருவேறு உலகை ஒன்று சேர்கிறது, இந்த நாவல். உதரணமாக, நீங்கள் வட சென்னையில் பழிக்காக ஒரு கொலை நடந்தது என செய்தி படிக்கிறீர்கள். தன்னிச்சையாக, கொலையாளி அதே வடசென்னையை சார்ந்தவன் என நீங்கள் எண்ண விளையும். ஆனால், இந்த நாவலில் வரும் கொலையாளி, கொங்கு பகுதியில் பிறந்து, கிராம சூழலில் வளர்ந்து , குடும்ப சந்தர்பங்களால் சென்னை வந்து, ஒரு கொலையாளியாக மாறுகிறான். அவன் வாழ்க்கை அங்கிருந்து எங்கு நகர்கிறது என்பதே...

மாயதீதம் விமர்சனம்

Image
 100 பக்க குறுநாவல்.  ஆசிரியர் - N. ஶ்ரீராம்  " கோட்டை மாரியம்மன்  - எனது சொந்த ஊர் சேலம், கோட்டை மாரியம்மன் பிரசித்தி பெற்றது. சேர மன்னர்கள் ஒரு கோட்டையை எழுப்பி, அதில் வைத்து வழிபட்ட அம்மனே கோட்டைமாரியம்மனாக மருவியது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன் கோவிலுக்கு இது தலைமை. இன்னும் கோட்டைமேடு என்னும் பெயரில் சேலத்தில் பகுதி உள்ளது. பால்யத்தில் கோட்டை மாரியம்மன் திருவிழா என்றால் ஊரே அமர்க்களம் மற்றும் பய பக்தி  காற்றினில் பரவும் "       சேலம் கோட்டை மாரியம்மன் ---  நாவலின் தொடக்கத்தில், கோட்டை மாரியம்மன் தனது விஸ்வரூப குதிரையில் காவு வாங்க துரத்துகிறது. அது ஏன் துரத்துகிறது, கதை நாயகனுக்கும் கோட்டை மாரியமனுக்கும் என்ன தொடர்பு என்பதே நாவலின் மையம். ஒரு குடும்பத்தில் வம்சாவளியாக வரும் நோய், சாபம் தீர்க்க என்ன வழி? நம்பிக்கை மட்டுமே.. பல்வேறு அம்மன்கள், பல்வேறு ஊர்களில், பலவாறு நம்பிக்கைகள். இந்த நம்பிக்கையை , கிராம மக்களின் வாயிலாக ஶ்ரீராம் அவர்கள் விறு விறு என கதையை நகர்த்துகிறார். பல மருத்துவர்கள் கைவிட்ட சிறுவனின்   தீரா கண் நோயை குணமாக ...