பொன்முகலி கவிதை புத்தகம் - தாழம்பூ
பொன்முகலியின் - தாழம்பூ வாசிப்பு அனுபவம் ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய கவிதைகள். பெண்ணொருத்தி நாமறிந்த பிரபஞ்சம் தாண்டி , அங்கு இருக்கும் ஓர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்த ஊஞ்சலின் நீளம் மிக அதிகம். அங்கிருந்து வெவ்வேறு உலகிற்கு அவளால் பயணம் செய்ய முடிகிறது , , எந்த ஒரு அக சமரசமும் அன்றி. அவளுக்கு கடவுளும், காதலனும், சமுதாயமும் , இவை யாவும் ஒன்றே. ஆனால், இவை அனைத்தும் அளிக்கும் பதற்றங்களை பற்றி ஆதங்கம் இருந்தாலும், தனக்கென தர்க்கமற்ற தனிவாதமும் , ஆதிக்க வெளிப்பாடும், தன்னை அங்கங்கு சிதறுண்டு, அதை பொறுக்கி, கல்லின் இடுக்கில் இருந்து ஒரு பூ மலர்வதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உண்டு. கூடவே, மரணத்தை வாஞ்சையுடன் கைக்குலுக்கி பயணத்தில் கூடவே வைத்து கொள்ளும் இயல்பு. இதுவே பொன்முகலி கவிதையின் உலகம். ---- தாழம்பூ தொகுப்பில் முகலி- காதலுடன், உடலுடன், மரணத்துடன், இரவுடன் அதீதமான உணர்சி உரையாடலை நிகழ்த்தி கொண்டிருக்கும்போது, சிறு துயர் கொண்டு பல துண்டுகளாக கவிதையில் உள்ள ' தான் ' உடைக்கிறது, அது மைக்ரோசாபில் காணும் உயிரினம் போல வடிவமற்ற...